Tuesday, November 9, 2010

கே. மயில்வாகனம் கண்டி தமிழ் சேவையின் பணிப்பாளர்

  • கே. மயில்வாகனம் கண்டி தமிழ் சேவையின் பணிப்பாளர் கண்டியிலே பிறந்து கண்டியிலே வளர்ந்து1983ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையின் மூலமாக அறிவிப்பு துறைக்குள் தன்னை உள்வாங்கி கொண்டார் .இன்று முதல் தர  அறிவிப்பாளராகவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மலையக சேவையின் தமிழ் சேவை பணிப்பாளராக தொடர்ந்தும் பணியாற்றுகிறார். ஏராளமான விருதுகளை தனதாக்கி கொண்டவர் மலயகத்துக்காக பல புதுமைகளை  படைத்தவர் இன்று பல அறிவிப்பாளர்களை தனியார் மற்றும் அரச ஊடகங்களுக்கு தந்த பெருமை இவருக்கு உண்டு. அறிவிப்பு துறையில் முதிர்ச்சி கண்ட மனிதர் அறிவிப்பு துறையின் மகிமையை எமக்கு எடுத்து காட்டியவர்.நான்அறிவிப்பு  துறையில் குழந்தையாய் தவழ்ந்த போது ஒலிபரப்பில் தட்டி கொடுத்து வளர்த்து விட்டவர் குட்டு வாங்கினாலும் மோதிர கையால் தான் குட்டு வாங்கணும் என்பார்கள் அதை போல் இவரிடம் நான் வாங்கிய ஏச்சுக்களும் பேச்சுக்களும் இன்று என்னை இந்தளவுக்கு வர வழிவகுத்தது இவரை பற்றி சொல்வதென்றால் சொல்லி கொண்டே போகலாம் நேர்முகத்தேர்வுக்கு சென்ற போதே தன்னுடன் நிகழ்ச்சி செய்ய அனுமத்திதவர் அவரோடு நான் செய்த நிகழ்ச்சி நவயுகம் சொல்வதற்கு வார்த்தைகள் பல ஆனால் சூரியன் கலையகம் என் நிகழ்ச்சிக்கான நேரத்தை குறிப்பிட்டு காட்டுகிறது
  • என்வாழ்வில் மறக்கமுடியாதவர்கள் பற்றி............... தொடரும்  . 

1 comment:

  1. arivippu thurajil ulla saathanajaalarhalai patri emakku therejatha palvearu sirappu thahalvahalai therevikkum unkal pajanathil innum palar patri areja avalaha erukintrom

    ReplyDelete